close
Choose your channels

பாரதிராஜா மகன் மீது திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன தெரியுமா?

Friday, July 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா மீது தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அவரும் ஒருசில வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வருகிறார். இருப்பினும் அவர் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுவதை இன்னும் தொடர்ந்தபடியே உள்ளார்.

இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் மனோஜை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாகவும், அவருடைய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.