close
Choose your channels

கூவத்தூரில் நடந்ததை கூற தயார்! கருணாஸ் மிரட்டலால் ஆளும்கட்சி அதிர்ச்சியா?

Saturday, September 29, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தவறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தனது அமைப்பின் பிரதிநிகளுடன் இன்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்த கருணாஸ் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடந்தது என்பதை ஐகோர்ட் அனுமதி அளித்தால் அனைத்தையும் கூறத்தயார் என்று கூறினார்.

தமிழக முதல்வர் பதவியை சசிகலா கைப்பற்ற முயற்சித்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனனவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கே என்ன நடந்தது? என்பது இன்று வரை மர்மமாக இருக்கும் நிலையில் கருணாஸ் இதனை வெளிப்படையாக கூறினால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.