கள்ளக்காதலுக்கு ஆர்.கே.நகர் டெக்னிக்கை பயன்படுத்திய இளம்பெண்

  • IndiaGlitz, [Saturday,October 27 2018]

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனை தேர்தல் முடிந்த பின்னர் கொடுத்து பணம் பெற்று கொள்ளலாம் என்று ஒரு வேட்பாளர் அறிவித்ததாக கூறப்பட்டது. இதே டெக்னிக்கை கள்ளக்காதலுக்கு ஒரு இளம்பெண் பயன்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஈரோடு பகுதியை சேர்ந்த வளர்மதி என்ற பெண் 20 ரூபாய் நோட்டில் தனது மொபைல் எண்ணை எழுதி புழக்கத்தில் விட்டுள்ளார். இந்த நோட்டு பல இடங்களுக்கு சென்று பின்னர் செந்தில்குமார் என்பவரின் கையில் சிக்கியது. அவர் அந்த நோட்டில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு வளர்மதியிடம் பேசினார்.

முதலில் நட்பாக தொடங்கிய இந்த உறவு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெளியே சுற்றுவது மட்டுமின்றி தனியாக அறையெடுத்தும் தங்கினர். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் செந்தில்குமாரை திருமணம் செய்ய முடிவு செய்த வளர்மதி அவருடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வளர்மதியின் தாயார் காவல்துறையில் புகார் செய்ய காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். வளர்மதிக்கு ஏற்கனவே மூர்த்தி எனபவருடன் திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

தீபாவளிக்கு களமிறங்குகிறது 'தல' அஜித் டீம்

தல அஜித்தை ஆலோசகராக கொண்ட தக்சா என்னும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்ட டீம் சமீபத்தில் உலக அளவில் சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

'தல' நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த விக்னேஷ் சிவன்

இந்திய கிரிக்கெட் அணி இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3வது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியை

மீடு குறித்து அனிருத் கூறிய கருத்து

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடங்கி வைத்த மீடூ விவகாரம் தற்போது கோலிவுட் திரையுலகையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்த 100 ரசிகர் மன்ற நிர்வாகிகள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் கதை குறித்து ஒருபக்கம் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு சிறிதளவும் குறையாமல் படத்தை வரவேற்க விஜய் ரசிகர்கள்

17 படங்கள், 17 இயக்குனர்கள்: வித்தியாசமான சாதனை செய்த கார்த்தி

நடிகர் கார்த்தி இதுவரை 16 படங்களில் நாடித்து முடித்துள்ளார். தற்போது அவரது 17வது படமான 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.