close
Choose your channels

ரோகிணி தியேட்டர் ஓப்பன் மைதானத்தில் ஐபிஎல் ஃபைனல்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

Sunday, May 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ரோகிணி தியேட்டர் ஓபன் மைதானத்தில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி எல்இடி ஸ்கிரீனில் ஒளிபரப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டான்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியை கோடிக்கணக்கானவர்கள் நேரலையில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் வளாகத்தில் உள்ள ஓபன் மைதானத்தில் எல்இடி ஸ்கிரீனில் ஐபிஎல் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண 400 ரூபாய் டிக்கெட் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள், தல தோனி ரசிகர்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்துடன் மேட்ச் பார்க்க விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.