close
Choose your channels

எழுந்து வா பாலு, உனக்காக காத்திருக்கின்றேன்: இசைஞானியின் உருக்கமான வீடியோ

Saturday, August 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், சரத்குமார், போனிகபூர் உள்ளிட பல்வேறு திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இசைஞானி இளையராஜா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பாலு எழுந்து வா! உனக்காக காத்து இருக்கின்றேன்’ என்று தொடங்கும் இளையராஜா அதன் பின்னர் ’நமது வாழ்வு வெறும் சினிமாவுடன் முடிந்து போவது அல்ல. எங்கேயோ மேடை கச்சேரிகளில் ஆரம்பித்து இசை நிகழ்ச்சியின் மூலம் நமது நட்பு அமைந்தது. இசைக் கச்சேரிகளில் ஆரம்பித்த நமது நட்பு என்றும் பிரிந்ததே இல்லை.

எப்படி ஸ்வரங்கள் இசையை விட்டுப் பிரியாமல் இருக்கின்றதோ அது போல் நம் நட்பும் எந்த காலத்தில் பிரிந்ததில்லை. நாம் சண்டை போட்டாலும், சண்டை இல்லாத போதும், அது நட்பு என நீயும் அறிவாய் நானும் அறிவேன். நீ நிச்சயம் திரும்பி வருவாய் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அது நிஜமாகவே நடக்கட்டும் உனக்காக நான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் எழுந்து வா என்று கூறியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos