கோவை பொதுக்கூட்டத்தில் சிக்கி கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு சாலையை கடக்க உதவிய இஸ்லாமியர்கள். வீடியோ.

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது சாலையை கடக்க முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களுக்கு சிலர் உதவி செய்த வீடியோ இப்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கோவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக மாலை ஆற்றுப்பாலத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் மாலை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் வேளையில், போராட்டத்திற்கு வந்திருந்த இஸ்லாமியர்கள் நடு ரோட்டிலேயே வரிசையாக நின்று தொழுகை நடத்தினர். இதனிடையே பொது கூட்டத்தினை கடக்க முடியாமல் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து வந்த பக்தர்கள் தவித்தனர்.

அப்போது இஸ்லாமியர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல், அவர்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் சாலையைக் கடந்து போக உதவி செய்தனர் . இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

More News

கங்குலிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த ரஜினி பட நடிகை!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்

தொலைந்த நாயை தேட வாடகைக்கு விமானம் எடுத்த இளம்பெண்

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் தொலைத்ததால் அந்த நாயை தேடுவதற்காக விமானத்தை வாடகைக்கு எடுப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

அண்ணா பல்கலைக்கழக மாணவர் தற்கொலை: அதிர்ச்சி காரணம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள

மதத்தையும் அரசியலையும் கலந்ததில் எங்கள் தவறும் இருக்கிறது..! உத்தவ் தாக்கரே.

மதத்தையும், அரசியலையும் கலந்ததில் நாங்கள் நிறைய துன்பங்களைச் சந்தித்திருக்கிறோம் எனப் பேசியுள்ளார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.