close
Choose your channels

50 வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்த பிரதமர்… 900 கோடி சொத்து எழுதி வைத்த ஆச்சர்யம்!

Monday, July 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இத்தாலியில் 3 முறை பிரதமராக இருந்து கடந்த ஜுன் மாதத்தில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனி குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

முன்னாள் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அதேபோன்று இத்தாலியில் பிரதமராக பொறுப்பு வகித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் சில்வியா பெர்லுஸ்கோனி. 3 முறை அந்த நாட்டின் பிரதமராக இருந்ததால் அதிக ஆதிக்கம் கொண்ட மனிதராகவும் இருந்து வந்தார். மேலும் தன்னுடைய தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டார் என்பது உட்பட இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் 86 வயதான இவர் தன்னைவிட 50 வயது குறைந்த மார்டா பாசியா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இவர் சொந்த கட்சியில் இருந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார். மேலும் ஒரு கட்டத்தில் கட்சியின் துணைத்தலைவர் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தகவல் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி அவ்வபோது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தொடர்ந்து வெளிப்படையாகவே தனது 33 வயது காதலியுடன் அவர் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சில்வியாவிற்கு கடந்த 2020 இல் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு கடுமையான நுரையீரல் தொற்றுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. மேலும் இவருக்கு மைலோமோனோ சைடிக் லுகேமியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து கடந்த மே மாதம் உடல்நிலை மோசமானதை அடுத்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போதும் தன்னுடைய 33 வயது காதலி மார்டா பாசியாவை அவர் படுக்கையில் இருந்து கொண்டே மனைவி என்று அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உடல்நிலை மோசம் அடைந்து கடந்த ஜுன் மாதம் சில்வியா உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவர் எழுதி வைத்துள்ள சொத்து பற்றிய உயில் அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் படிக்கப்பட்டு இருக்கிறது. அதில் தன்னுடைய 33 வயது காதலி மார்டா பாசியாவிற்கு 100 மில்லியன் யூரோ இந்திய மதிப்பில் 906 கோடி ரூபாய் சொத்து எழுதி வைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய சகோதரர் பாவ்லோவிற்கு, சில்வியா 100 மிலியன் யூரோ அதே 906 கோடி ரூபாய் சொத்து மதிப்பையும் தன்னுடைய நண்பருடன் கட்சிக்காக உழைத்தவருமான மார்ஷெல்லோ டெல்லிற்கு 30 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 271 கோடி ரூபாய்களையும் எழுதி வைத்துள்ளார்.

இதைத்தவிர சில்வியா இரண்டுமுறை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றிருக்கிறார். அந்த வகையில் முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாம் மனைவிக்கு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளுக்கு தன்னுடைய நிறுவனங்களின் 53% பங்கை உரிமையாகக் கொடுத்துள்ளார். மேலும் நிறுவனங்களைத் தவிர மற்ற சொத்துகளில் இவர்களுக்கு 60% உரிமை உண்டு.

அதேபோல இரண்டாம் மனைவியின் 3 குழந்தைகளுக்கு நிறுவனங்களிலுள்ள மீதி மற்றும் மற்றும் மற்ற சொத்துகளில் உள்ள 40% உரிமைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனி தன்னுடன் 50 வயது குறைந்த காதலி மார்டா பாசியாவிற்கு 100 மில்லியன் யூரோ இந்திய மதிப்பில் 906 கோடி ரூபாய் எழுதி வைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.