close
Choose your channels

இளையராஜா ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த ஜேம்ஸ் வசந்தன்

Wednesday, December 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வழக்கு ஒன்றில் சிம்புவை கைது செய்ய தடையில்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து இசைஞானி இளையாராஜாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் கோபம் அடைந்து நிருபரை திட்டியதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த சம்பவம் குறித்து கோலிவுட்டின் இன்னொரு இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு இளையராஜாவின் ரசிகர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் வந்ததால் தன்னுடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியதோடு மட்டுமின்றி தனது அக்கவுண்டையும் டீஆக்டிவேட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் ஜேம்ஸ் வசந்தன் இதுகுறித்து இளையராஜாவின் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தன்னுடைய டுவீட் இளையராஜாவின் ரசிகர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜேம்ஸ் வசந்தன் தனது பெயரில் ஒருசில போலி சமூகவலைத்தள அக்கவுண்ட்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தனது சமூக வலைத்தள அக்கவுண்ட்டை டீஆக்டிவேட் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையை இத்துடன் முடித்து கொள்ள தான் விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.