close
Choose your channels

ஜெயலலிதா சிலை திறக்க பரோலில் வருகிறாரா சசிகலா?

Thursday, February 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை அதிமுகவினர்களால் கொண்டாடப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பின்னர் வரும் முதல் பிறந்த நாள் என்பதால் இந்த வருட பிறந்த நாளை அதிமுக அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாட அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ஒன்பது அடி சிலை ஒன்று உருவக்கப்பட்டு அந்த சிலை இரண்டு தினங்களுக்கு முன் அதிமுக அலுவகத்திற்கு வந்துள்ளதாம்.

இந்த சிலையை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வைக்க அதிமுகவினர் முதலில் திட்டமிட்டனர். ஆனால் சசிகலா தற்போது சிறையில் இருப்பதால் அவருடன் ஆலோசனை செய்து வேறு ஒரு நாளில் சிலை திறப்பு விழா நடத்தப்படும், என்றும் இந்த சிலையை சசிகலா பரோலில் வந்து திறந்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.