மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் இணையும் கமல்-மோகன்லால்

  • IndiaGlitz, [Sunday,August 06 2017]

கமல்ஹாசன் - மோகன்லால் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'உன்னை போல் ஒருவன்'. இந்த படத்தை அடுத்து மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் கமல்-மோகன்லால் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அக்சயகுமார் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்த 'ஓ மை காட்' என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் கமல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் அறிவித்த 'தலைவன் இருக்கின்றான்' என்ற அரசியல் கலந்த படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும், இந்த படத்தில் தான் கமல்ஹாசன், மோகன்லால் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓ மை காட்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ், பவன்கல்யாண் நடித்த 'கோபாலா கோபாலா' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தமிழில் இந்த படத்தில் கமல்-மோகன்லால் நடிப்பில் உருவானால் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இன்று வெளியேறுகிறாரா ஜூலி? கசிந்த புகைப்படத்தால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய இறுதிக்காட்சியில் நாளை எவிக்சன் இருக்கின்றது என்று கமல்ஹாசன் கூறினார்.

வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து.

இந்தியாவின் அடுத்த துணை குடியரசு தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்றது. அனைத்து எம்பிக்களும் ஓட்டு போட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று மாலையே எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் கண்டிப்பு ஆரம்பம்: பதறும் பங்கேற்பாளர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறது.

நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா? ஓவியா வெளியேறிய பின் நடந்தது என்ன?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஓவியா விடைபெற்றார். ஓவியா இருந்த கடைசி வினாடி வரை அவரை எப்படி வெளியேற்றுவது என்று கூட்டமாக யோசித்து கொண்டிருந்த பங்கேற்பாளர்கள் அவர் வெளியேறிய பின்னர் வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பது நிஜக்கண்ணீரா அல்லது நீலிக்கண்ணீரா என்று நிகழ்ச்சியை பார்க்கும் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்

ஓவியா வெளியேற யார் காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறிய பின்னர் வீடே வெறிச்சென்று இருந்தது. மற்ற பங்கேற்பாளர்கள் சோகமே வடிவமாக காணப்பட்டனர்.