close
Choose your channels

ஓவியா வெளியேற யார் காரணம்?

Sunday, August 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் பங்கேற்பாளரான ஓவியா நேற்று வெளியேறிய பின்னர் வீடே வெறிச்சென்று இருந்தது. மற்ற பங்கேற்பாளர்கள் சோகமே வடிவமாக காணப்பட்டனர். சினேகன், ரைசா ஆகியோர் கண்ணீர் வடித்தனர். நாளை ஒருவேளை வெளியேறினால் நேராக ஓவியாவை சென்று பார்ப்பேன்' என்று ஜூலி கூறினார். இதெல்லாம் உண்மையான வருத்தமா? அல்லது நீலிக்கண்ணீரா? என்பதே இப்போது பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.
மற்ற பங்கேற்பாளர்களுடன் ஓவியாவின் உறவு சீராக கொண்டிருந்த நிலையில் ஓவியாவின் பெயரை முதன்முதலில் டேமேஜ் செய்தது ஜூலி தான். அவர் தான் ஓவியாவை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறி, சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக்கி மற்றவர்கள் மனதில் அவர் மீது வெறுப்பை உண்டாக்க காரணமானார்.
ஓவியாவுக்கு ஆடியன்ஸ் கொடுத்த கைதட்டலை பார்த்த மற்ற பங்கேற்பாளர்களுக்கு ஓவியா இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியாது என்பதும் தெரிந்துவிட்டதாலும், எத்தனை முறை வெளியேறுவதற்கு நாமினேஷன் செய்தாலும் அத்தனை முறையும் ஓவியா பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு வருவதாலும் எரிச்சலடைந்த பங்கேற்பாளர்கள் பரணி ஃபார்முலாவை பயன்படுத்தி வெளியேற்ற முடிவு செய்தனர்.
வேண்டுமென்றே ஓவியாவுக்கு எரிச்சல் தரும் வகையில் டாஸ்க் கொடுத்தனர். ஜூலிக்கு ரெட் கார்ப்பெட் விரிப்பதெல்லாம் அதிகபட்ச கொடுமை. டாஸ்க் என்பது ஒரு விளையாட்டுதான் என்றாலும் சுயமரியாதைக்கு இழுக்கு நேர வைக்கும் டாஸ்க் இது. இந்த நேரத்தில் தனக்கு ஒரே ஆறுதலாக இருந்த ஆரவ்வும் அவரை ஒதுக்கி வைத்ததைத்தான் ஓவியாவால் தாங்க முடியவில்லை. மற்ற அனைவரும் வெறுத்து ஆரவ் மட்டும் ஆதரவு கொடுத்திருந்தால் கூட ஓவியா அந்த வீட்டில் தொடர்ந்திருபார்.
ஆரவ்வின் வெறுப்பு, நேரிலும் மறைமுகமாகவும் திட்டும் காயத்ரி, அறிவுரை என்ற பெயரில் மனதை குழப்பிய சினேகன், புறங்கூறுவதையே முழு தொழிலாக கொண்ட ஜூலி, ஆண் நண்பர் பெயரை கூறியதற்காக நீலிக்கண்ணீர் வடித்த ரைசா, என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று கண்டுகொள்ளாமல் இருக்கும் கணேஷ், இவர்கள் மத்தியில் இவ்வளவு நாள் ஓவியா இருந்ததே பெரிய விஷயம் தான். மொத்தத்தில் பிக்பாஸ் என்பதை ஒரு போட்டி, விளையாட்டு என்று பார்க்காமல் வெற்றி பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் பிக்பாஸ் வீட்டில் உள்ளது. எனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற பிக்பாஸ் உள்பட அந்த வீட்டில் இருந்த அனைவருமே காரணம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.