close
Choose your channels

நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா? ஓவியா வெளியேறிய பின் நடந்தது என்ன?

Sunday, August 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று ஓவியா விடைபெற்றார். ஓவியா இருந்த கடைசி வினாடி வரை அவரை எப்படி வெளியேற்றுவது என்று கூட்டமாக யோசித்து கொண்டிருந்த பங்கேற்பாளர்கள் அவர் வெளியேறிய பின்னர் வருத்தப்பட்டு கண்ணீர் வடிப்பது நிஜக்கண்ணீரா அல்லது நீலிக்கண்ணீரா என்று நிகழ்ச்சியை பார்க்கும் சின்ன குழந்தைக்கு கூட தெரியும்
ஓவியா இருக்கும் வரை நேருக்கு நேர் முகம் பார்த்து கூட பேசாத சக்தி, ஓவியா வெளியேறும்போது ஒரு 'பை' கூட சொல்லாமல் வெளியேறிவிட்டதாக புலம்புவது செயற்கைத்தனமாகவே உள்ளது. கடைசி நாளில் ஓவியாவிடம் 'தன்னால் ஓவியாவை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு வருத்தப்படுவதாக சக்தி கூறினாலும், அந்த வார்த்தைகள் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வெளிவந்ததாக தெரியவில்லை. இதற்கு ஓவியா எந்தவிதமான ரியாக்சனும் காட்டாததே இதை உறுதி செய்தது.
ஓவியாவுக்கு அவ்வப்போது சினேகன் அறிவுரை கூறி வந்தாலும், அந்த அறிவுரைகள் பிரச்சனைக்கு தீர்வாக அமையாமல், மேலும் குழப்பம் அடையவே காரணமாக இருந்தது. கடைசி நாளில் ஓவியா முன் சினேகன் அழுததை, 'ஓவர் ஆக்டிங்' செய்ய வேண்டாம் என்று ஓவியா கூறியது உண்மை என்றுதான் எண்ண தோன்றுகிறது. என்னதான் ஓவியாவுக்கு சினேகன் ஆதரவு கொடுப்பது போல் தெரிந்தாலும் அவர் காயத்ரி குரூப்புக்குத்தான் அதிக சப்போர்ட் செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை
ஓவியாவை தான் அதிகளவில் காயப்படுத்திவிட்டோம் என்று ரைசா வருத்தப்படுவதில் மட்டும் கொஞ்சம் உண்மை இருப்பதாக தெரிகிறது. அவரது வருத்தம் உண்மை என்பது அவரது கண்ணில் இருந்து தெரிந்தாலும் தாமதமான வருத்தம் என்பதால் அவர் மீது பரிதாபம் ஏற்படவில்லை.
நான் வெளியே சென்றவுடன் ஓவியாவுக்கு போன் செய்து தன்னை மன்னித்து விடும்படி கேட்பேன் என்றும், நேரில் ஓவியாவை பார்த்து என்னை ஒரு அடி அடித்து கோபத்தை தீர்த்து கொள் என்று கூறுவேன் என்று கூறுவது ஜூலியின் அடுத்த பொய். ஓவியாவின் வெளியேற்றத்திற்கு 90% காரணமாக இவர் அடுத்து யாரை வெளியேற்றலாம் என்று தான் சிந்திக்க தொடங்குவாரே தவிர, ஓவியாவுக்காக வருத்தமோ, பரிதாபமோ இவரது தரப்பில் இல்லை என்பது தான் உண்மை. ஓவியா இருக்கும்போது ஏன் மன்னிப்பு கேட்கவில்லை என்ற பிந்துமாதவியின் கேள்விக்கு ஜூலி கூறியதும் வடிகட்டின பொய்
ஓவியாவின் வெளியேற்றத்தை மனதிற்குள் பூட்டி வைத்து கொண்டாடும் காயத்ரி, மற்றவர்களை தேற்றும் முயற்சியில் பொய்யாக ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதன்முதலாக உண்மையாக கண்ணீர் வடித்தார் பிந்துமாதவி. தனது நெருக்கமான தோழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவர் உண்மையாகவே வருந்தியதாகவே தெரிகிறது.
மொத்தத்தில் மகாபாரத் போரில் அர்ஜூனன் மகன் அபிமன்யூ சக்கர வியூகத்திற்குள் புகுந்து வீரமாக போரிட்டாலும், அந்த வியூகத்தில் இருந்து வெளியேறுவது எப்படி என்று தெரியாததால் வீரமரணம் அடைந்தார். அதேபோல் பிக்பாஸ் என்ற போர்க்களத்தில் நுழைந்து அனைவரையும் தைரியமாக எதிர்கொண்டு பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்த ஓவியாவால் காதல் தோல்வியை காதல் தோல்வி என்ற வியூகச்சக்கரத்தில் இருந்து வெளியே வர தெரியவில்லை. அவரது வெளியேற்றத்திற்கு கெளரவர்களாகிய பிக்பாஸ், சேனல் நிர்வாகிகள், பங்கேற்பாளர்கள் என அனைவருமே ஒரு விதத்தில் காரணம் என்பது தான் உண்மை என்பதே பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.