நிக்சன் கேப்டன்ஷிப்.. கமல் கேட்ட கேள்வியால் திணறிய மாயா..
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் ஓடிவிட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் நிக்ஸன் கேப்டனாக இருந்த நிலையில் அவரது கேப்டன்ஷிப் எப்படி உள்ளது என்று கமல்ஹாசன் சக போட்டியாளர்களிடம் கேட்டார்.
மேலும் நிக்சன் தனது கேப்டன்சியை சிறப்பாக செய்தார் என்று சொல்பவர்கள் ஒரு ஓரமாக உட்காருங்கள் என்று கமல்ஹாசன் கூறினார். அதேபோல் சிறப்பாக செய்யவில்லை என்பவர்கள் இன்னொரு ஓரமாக உட்காருங்கள் என்று தெரிவித்தார். அர்ச்சனா, மணி, ரவீனா, தினேஷ் ஆகியோர் நிக்சன் கேப்டன்ஷிப் சரியில்லை என்றும், மற்றவர்கள் நிக்சனுக்கு ஆதரவாகவும் உட்கார்ந்தனர்,
’நிக்சன் கேப்டன்சி என்பது விக்ரமின் கேப்டன்சி 2.0 பார்த்த மாதிரி இருந்துச்சு’ என்று மணி கூறினார். அர்ச்சனா தனது கருத்தை கூறியபோது மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது.
அதன்பின்னர் மாயாவிடம் ‘நீங்கள் எதற்காக மணி அடித்தீர்கள்? என்று கேட்டு அதன் பின்னர் ’அப்புறம் எப்படி நீங்கள் இந்த பக்கம் வந்து உட்கார்ந்தீர்கள்’ என்று கேட்க மாயா பதில் கூற முடியாமல் திணறுவதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்தது. மொத்தத்தில் கமல்ஹாசன் இன்றும் மாயா கேங்கை வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)