close
Choose your channels

அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து... கமல்ஹாசனின் டுவிட்!

Monday, January 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து.. என்று தொடங்கும் ட்விட்டை உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்பட நாடு முழுவதிலும் உள்ள பிரபலங்கள் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சுபாஷ் சந்திர பிறந்த நாள் குறித்த பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.

இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த டுவிட்டையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் சம்பந்தப்படுத்தி நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment