மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் இது: கமல்ஹாசன் ஆவேசம்

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார் என்பதும் இந்த கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. எனவே இன்று முதல் தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது

More News

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா எண்ணிக்கை!!! காரணம் இதுதான்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக இருந்தது.

1210 பேர்களில் 806 பேர் நான்கு பகுதிகளில் மட்டும்: சென்னையில் கொரோனா நிலவரம்

தமிழகத்திலேயே கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு நேற்று மட்டும் கொரோனாவால் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சொந்த நிலத்தை விற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாஷா சகோதரர்கள்!!!

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தாஜம்ல் பாஷா மற்றும் முசம்மில் பாஷா என்ற சகோதரர்கள் இருவரும் தங்களது சொந்த நிலத்தை விற்று

வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும்!!! சோனியாகாந்தி அறிவிப்பு!!!

இந்தியாவில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றோடு முடிவடைந்து மீண்டும் மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு எதிரான 5 Eyes உளவுத்துறையின் 15 பக்க ரிப்போர்ட்!!! என்ன சொல்கிறது???

கொரோனா பரவல் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகளை உலக நாடுகள் முன்வைத்து வருகின்றன