close
Choose your channels

பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை: கடிதத்தில் எழுதியிருப்பது என்ன?

Thursday, September 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் தான் தங்கியிருந்த அபார்ட்மென்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் கன்னட தொலைக்காட்சி தொடர் நடிகை செளஜன்யா என்பவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்குவதைக் ஜன்னல் வழியாகப் பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து செளஜன்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சில தொடர்களில் நடித்து வரும் செளஜன்யாவுக்கு கடந்த சில மாதங்களாக சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முன் நடிகை செளஜன்யா எழுதி வைத்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்பல்ல என்றும், தான் மட்டுமே பொறுப்பு என்றும், தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும், தனக்கு ஏற்பட்ட தோல்விகள் தன்னை மனதளவில் பாதிக்க வைத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார். நடிகை செளஜன்யாவின் மரணம் கன்னட சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கன்னட நடிகை செளஜன்யா தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவருடன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos