close
Choose your channels

குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

Friday, April 14, 2023 • தமிழ் Comments
CSK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ’விசில் போடு எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் கன்னியாகுமரியில் கிளம்பும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 750 ரசிகர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் வரும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் அனைத்து செலவுகளையும் சிஎஸ்கே நிர்வாகம் ஏற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைவருக்கும் சிஎஸ்கே - பஞ்சாப் போட்டியை பார்க்க இலவச டிக்கெட் வழங்கப்படும். இது குறித்த தகவலை சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதற்கு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் www.chennaisuperkings.com/whistlepoduexpress/#/ என்ற இணையதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்யலாம். அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படும் 750 ரசிகர்கள் இந்த விசில் போடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து சென்னை பஞ்சாப் போட்டியை இலவசமாகவும் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.