ரஜினிக்கு கட்சி ஆரம்பித்தவுடன் வாக்குச்சதவீதம் சுனாமி போல் ஆகிவிடும்: கராத்தே தியாகராஜன்

  • IndiaGlitz, [Sunday,October 06 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் கட்சி ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவருமான கராத்தே தியாகராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ரஜினி ஒரு வாக்கு கொடுத்தால், அதை மீறமாட்டார். 2017-ல் தனியாகக் கட்சி தொடங்குவேன் என்று கூறினார். அவர் கூறியதுபோல, விரைவில் கட்சியைப் பதிவு செய்வார். தமிழ்நாட்டின் வாக்கு சதவீதமே, சுனாமி போல மாறிவிடும். ரஜினியின் கட்சி பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும்.

அடுத்த ஆண்டு, ரஜினியின் பிறந்த நாள் இதைவிட பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார். கடந்த செப். 15-ம் தேதி, அண்ணா பிறந்த நாள் விழாவில் வைகோ பேசினார். அப்போது தமிழ்நாட்டில் 99% பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ரஜினி சொன்னதைப் போல செயல்பட வேண்டும் என்று ஆன்மிக அரசியல் குறித்துப் பேசினார். ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் பரிசோதித்துப் பார்க்கிறார்'' என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

More News

வலுக்கும் எதிர்ப்புகள்: பிக்பாஸ் ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறதா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதி நாள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனின் வெற்றியாளர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் டைட்டிலை முகின் வெல்ல ஒரே காரணம்!

பிக்பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் என கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும்,

மாதவன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'விக்ரம் வேதா' வெற்றி படத்திற்கு பின் மாதவன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம்' மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'ராக்கெட்டரி'

மணிரத்னத்திற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆதரவு!

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் நாட்டின் நிலை குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிய நிலையில் இந்த கடிதம் காரணமாக 49

நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து: சென்னையில் பரபரப்பு

bigg boss tamil yaashika anand car accident youth injured nungambakkam