close
Choose your channels

கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் டிராவிட்டுக்கு தேடி வந்த பதவி

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு பதவிகளை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதர் பதவியை அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்து கூறவும் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் டிராவிட்டை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

ஏற்கனவே கர்நாடக மாநில போக்குவரத்து காவல்துறையினர் தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்த ஒரு ஆவணப்படத்தில் ராகுல் டிராவிட் நடித்திருந்தார். இந்த ஆவணப்படம் வாகன ஓட்டிகளிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது தேர்தல் ஆணையம் அவரை தூதராக நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.