close
Choose your channels

'உள்ளயே இருங்க, அதான் ஊருக்கு நல்லது': வைரலாகும் 'சுல்தான்' படத்தின் டைமிங் வசனம்!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான கார்த்திக் நடித்த ‘சுல்தான்’ படத்தில் வசனமான ’உள்ளேயே இருங்கள் அதான் ஊருக்கு நல்லது’ என்ற வசனத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் இந்தியாவில் 4 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அன்றைய தினத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டைமிங் வசனமாக ‘சுல்தான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’உள்ளேயே இருங்கள் அதான் ஊருக்கு நல்லது’ என்ற வசனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ’வெளியே கொஞ்சம் வேலை இருக்கு என்று லால் கூறும் போது ’வெளியே வந்து என்ன கிழிக்க போறீங்க, உள்ளே இருங்க அதான் ஊருக்கு நல்லது’ என்று கார்த்தி பேசும் வசனம் இன்றைய காலகட்டத்திற்கு மிகப்பொருத்தமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.