கார்த்தியின் அடுத்த பட இயக்குனர் இவர் தான்: சென்னையில் இன்று பூஜை..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள உள்ள நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கார்த்தி நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தற்போது நடித்து வரும் ’ஜப்பான்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாகவும் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல் கூறுகின்றன. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சூர்யா நடித்து வரும் ’சூர்யா 42’ மற்றும் விக்ரம் நடித்துவரும் ’தங்கலான்’ ஆகிய இரண்டு பிரமாண்டமான படங்களை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவான சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://1571723588.rsc.cdn77.org/anomusercomment.jpg)