close
Choose your channels

அடப்பாவி, உன்னை போயி போராளின்னு நினைச்சேனே! கஸ்தூரி டுவீட்

Saturday, February 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற சென்றிருந்தபோது ஒரு இளைஞர் அவரை ”யார் நீங்க” என்ற கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ரஜினியை ’யார் நீங்கள்’ என்று கேட்ட இளைஞர் திருட்டு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பைக்கை திருடவில்லை என்றும் திருட்டு பைக்கை விலைக்கு வாங்கியுள்ளார் என்றும் தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

அடப்பாவி! ஏதோ போராளி போல நினைச்சுருந்தோமே! திருடலையாம். திருட்டு பைக்க வாங்கியிருக்கான். 2 லட்சம் பைக் 17000 க்கு... ஆர்சி புக் இல்லாம... நேரடியா திருடறதுக்கு திருட்டுப்பொருளை தெரிஞ்சே வாங்குறது ஒண்ணும் கொறஞ்சதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos