close
Choose your channels

ரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் கமெண்ட்!  

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக செலவீனம் அரசுக்கு இருப்பதாகவும் எனவே அரசுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவருடன் சேர்ந்து முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூபாய் 1 கோடிக்கான காசோலையை கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் மற்றும் அவருடைய தந்தை சூலூர் வணங்காமுடி ஆகியோர் தமிழக முதல்வர் நிவாரண பணிக்கு ரூபாய் ஒரு கோடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபெக்ஸ் லேபரட்டரி சொந்தமாக உள்ளது. மேலும் விசாகனின் குடும்பம் திமுகவினருக்கு மிகவும் நெருக்கமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos