சர்கார் பிரச்சனை எதிரொலி: கே.பாக்யராஜ் எடுத்த அதிர்ச்சி முடிவு

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'சர்கார்' கதை தன்னுடைய செங்கோல்' கதை என வருண் ராஜேந்திரன் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த சங்கத்தின் தலைவரான கே.பாக்யராஜ், சர்கார் படத்தின் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் என அறிவித்தார். இதனையடுத்து இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் 'சர்கார்' இயக்குனர் முருகதாஸ் மற்றும் வருண் ராஜேந்திரன் சமரசம் செய்து கொண்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் 'சர்கார்' பிரச்சனையால் பாக்யராஜூக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சற்றுமுன் 'எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

கே.பாக்யராஜ் ராஜினாமா என்பது அவர் சொந்தமாக எடுத்த முடிவா? அல்லது அவர் ராஜினாமா செய்ய யாராவாது அழுத்தம் கொடுத்தார்களா? என்ற கேள்வி சமூக வலைத்தள பயனாளர்களிடையே எழுந்துள்ளது.

 

More News

தனுஷின் 'மாரி 2' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்த அடுத்த படமான 'மாரி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சமீபத்தில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

ஜோதிகாவின் இரட்டை சகோதரிகள் யார் தெரியுமா?

நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கின்றது. தீபாவளி கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

செல்பி எடுத்த இளைஞருக்கு புது போன் வாங்கி கொடுத்த சிவகுமார்

சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது அவரை செல்பி எடுக்க ஒரு இளைஞர் முயற்சி செய்தார். இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே