close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்

Friday, November 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் 13வது மற்றும் 14வது படங்களாக உருவாகவுள்ளன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் ஆக்சன்கிங் அர்ஜூன் இணைந்துள்ளார். பி.எஸ்.மித்ரனின் முதல் படமான 'இரும்புத்திரை'யிலும் அர்ஜூன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகார்த்திகேயன் - அர்ஜூன் முதன்முதலாக இணையும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ,ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனார். இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த செய்தி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.