சிகிச்சை மறுக்கப்பட்ட தமிழர் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பு கேட்ட கேரள முதல்வர்

  • IndiaGlitz, [Thursday,August 10 2017]

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்ற கூலித்தொழிலாளி கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

முருகனுக்கு சிகிச்சை அளிக்க கொச்சி, திருவனந்தபுரம் மருத்துவமனைகள் மறுத்துவிட்டதால் சிகிச்சை பெறாமலே சுமார் 8 மணி நேரம் ஆம்புலன்ஸ் அலைக்கழிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிகிச்சை அளிக்க தவறிய ஐந்து மருத்துவமனைகள் மீது மனித உரிமை கமிஷன் புகாரின் அளித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா கூறியபோது, 'முருகனுக்கு சிகிச்சை அளிக்காததன் காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.

இந்த நிலையில் மருத்துவமனைகள் அவசர சிகிச்சையளிக்காததால் உயிரிழந்த முருகன் உறவினர்களிடம் கேரள மக்களின் சார்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்புக் கோரினார். மேலும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த பதிவுகள் கேரள முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.

விஷாலின் 25வது படத்தின் பூஜை! ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான செட்

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றூம் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'இரும்புத்திரை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

சமந்தா-நாகசைதன்யா திருமண அழைப்பிதழ் இதுதான்

பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் வரும் அக்டோபர் மாதம் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'ஆளப்போறான் தமிழன்' பாடலின் மேலும் இரண்டு வரிகள்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோ டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

4 நண்பர்களுடன் இணையும் தோழி: 'கூட்டாளி' படத்தின் வித்தியாசமான கதை

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நான்கு நண்பர்கள், அவர்களோடு தோழியாக இணையும் ஒரு பெண், அதனால் வாழ்விலும் தொழிலிலும் ஏற்படும் பிரச்சினைகள், அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் குறித்து வித்தியாசமான கதையுடன் உருவாகி வரும் திரைப்படம் 'கூட்டாளி'