close
Choose your channels

'ஆளப்போறான் தமிழன்' பாடலின் மேலும் இரண்டு வரிகள்!

Thursday, August 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வீடியோ டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆளப்போறான் தமிழன், "தமிழாலே ஒன்னானோம், மாறாது எந்நாளும் போன்ற வரிகள் எதை குறிக்கின்றது என்பது குறித்து இணையதளங்களில் விஜய் ரசிகர்கள் ஒரு விவாதமே நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடலின் மேலும் இரண்டு வரிகளை இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
"அன்பக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்..
மகுடத்தத் தரிக்கிற 'ழ'கரத்தச் சேத்தோம்"
என்பதுதான் அந்த வரிகள். இந்த வரிகளில் இருந்து இந்த பாடல் தமிழ், மற்றும் தமிழர்களின் பெருமை குறித்து குறிப்பிடும் பாடலாக இருக்கும் என்பது உறுதியாகிறது.
மேலும் பாடலசிரியர் விவேக் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர், 'எம்ஜிஆருக்கு ஒரு வாலி, ரஜினிக்கு ஒரு வைரமுத்து, தளபதி விஜய்க்கு ஒரு விவேக்' என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விவேக், 'இந்த புகழுரையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் தான் கடினமாக உழைத்து நல்ல பாடல்களை கொடுக்க முயற்சி செய்வேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.