பிரச்சனை ரொம்ப பெரிசா ஆயிடுச்சு, என்ன பண்றதுன்னே புரியலை: கே.எஸ்.ரவிகுமார் வெளியிட்ட வீடியோ!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கேஎஸ் ரவிக்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ’கூகுள் குட்டப்பன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ’பிரச்சனை பெரிதாகி விட்டது என்றும், என்ன செய்வது என்றே புரிய வில்லை என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அது மாதிரி எனக்கும் ஒரு கனவு இருந்தது. சொந்தத்தில் ஒரு வீடு கட்டவேண்டும் என்பதுதான் அந்த கனவு. பல வருடங்கள் கஷ்டப்பட்டு ஓய்வு பெறும் வயதில் ஒரு அழகான வீடு கட்டினேன். அதில் சந்தோசமாக இருக்கலாம் என்று நினைக்கும்போது ஒரு பிரச்சனை வந்தது. நான் என்ன கோழையா? எதிர்த்து கேட்டேன், பிரச்சனை ரொம்ப பெரிதாகி விட்டது. என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. அதனால் தான் உங்களிடம் பேசுகிறேன். மறுபடியும் நாம் பேசுவோம். அப்பொழுது உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும், அடுத்த வீடியோவில் பேசுவோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

விஜய்சேதுபதிக்கு விருது வாங்கி கொடுத்ததே அதுதான்: நெட்டிசன் கிண்டலுக்கு குஷ்பு பதிலடி!

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவருக்கு வரும் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு கொடுத்து உள்ளது

மினி லாரியில் கேரளா டூ தூத்துக்குடி சென்ற பணம்...!

கேரளாவில் இருந்து தூத்துக்குடிக்கு மீன்வாங்க மினிலாரி மூலம் வந்த வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர். 

அண்ணாமலையை ஆதரித்து பேசிய  நடிகை நமீதா....! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்...!

அண்ணாமலைக்கு ஆதரவாக நமீதா பிரச்சாரத்தை மேற்கொண்டதில், அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 

பிரபல தமிழ் ஹீரோ நடிகருக்கு கொரோனா: அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்றுப் ஏற்பட்டுள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தமிழ் நடிகர் கைது!

நடிகரும் திருப்புவனம் தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.