close
Choose your channels

அண்ணாமலையை ஆதரித்து பேசிய  நடிகை நமீதா....! அதிருப்தி அடைந்த தொண்டர்கள்...!

Thursday, March 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அண்ணாமலைக்கு ஆதரவாக நமீதா பிரச்சாரத்தை மேற்கொண்டதில், அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரவக்குறிச்சியில், பாஜக சார்பாக வேட்பாளராக களமிறங்குபவர் தான் முன்னாள் டிசிபி அண்ணாமலை. இவரை ஆதரித்து நடிகை நமீதா அத்தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம். இம்முறை அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித்தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் சூடுபிடிக்க பிரச்சராத்தை நடத்திவருகிறார்கள்.

பொதுவாகவே பாஜக-வில் நட்சத்திர பரப்புரையாளர்கள் அதிகம். அந்த வகையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகை நமீதா முதன் முதலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,
"தமிழகத்தில் தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்" என்று பேசியபோது, பெரிதாக தொண்டர்கள் கோஷம் எழுப்பவில்லை. இதனால் அவரேமீண்டும், இன்னும் சத்தம்போடுங்கள் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நான் வாழ்க்கையிலே முதன் முதலாக பிரச்சாரம் செய்கிறேன். கர்நாடகாவில் டிசிபி-யாக இருந்தவர் தான் நமது வேட்பாளர் அண்ணாமலை. இவர் சிங்கம் போல திறமை மிக்க காவல் அதிகாரி, இவருக்கு வாக்களத்தால் தொகுதியில் சட்டம் ஒழுங்குகள் சரியாக இருக்கும். இவர் நன்கு படித்து, விவரங்கள் தெரிந்தவர். 'காஞ்ச மண்ணு பச்சை மண்ணா மாறனுமா..? அப்படினா பாஜக-வுக்கு ஓட்டு போடுங்க. அம்மா திறமையான தலைவி. அதேபோல் ஜெயலலிதாவுக்கு இருக்கும் அனைத்து தகுதிகளும் அண்ணாமலையிடமும் உள்ளது என்று கூறி வாக்குகள் சேகரித்தார். ஜெ-வுக்கு நிகராக இவரை கூறியதால், அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் அதிருப்தி அடைந்தனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.