close
Choose your channels

மணிமேகலையை அடுத்து 'குக்வித் கோமாளி'யில் இருந்து விலகுகிறாரா குரேஷி.. அவரே அளித்த விளக்கம்..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ சீசன் 4 தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனில் பழைய கோமாளிகளான மணிமேகலை, குரேஷி, புகழ் மற்றும் சுனிதா ஆகிய நான்கு பேர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் மோனிஷா, ரவீனா, ஜிபி முத்து, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் இதில் மணிமேகலை திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான சரியான காரணத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் சொந்த கிராமத்தில் வீடு கட்டிக் கொண்டிருப்பதால் தான் அவர் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மணிமேகலையை அடுத்து குரேஷியும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் வதந்தியாக பரவி வருகிறது. மூன்றாவது சீசனில் இருந்து கோமாளியாக இருந்து வரும் குரேஷி மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பெற்று விட்டார் என்பதும் குறிப்பாக ஸ்ருதிகா கெட்டப் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

இந்த நிலையில் மணிமேகலையை அடுத்து குரேஷியும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப் போவதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் குறித்து குரேஷி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் ’காமெடி பண்ணாமல் சாகமாட்டேன், குக் வித் கோமாளியை விட்டு விலக மாட்டேன், வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து குரேஷி விலகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.