நாங்கள் சிறப்பான ஜோடி: பிரபல நடிகரை குறிப்பிட்டு சொன்ன குஷ்பு!

  • IndiaGlitz, [Sunday,November 01 2020]

பிரபல நடிகருடன் தான் நடிக்கும் போது தங்களை சிறப்பான ஜோடியாக ரசிகர்கள் மனதில் வைத்து இருந்தார்கள் என்று குஷ்பு குறிப்பிட்டு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அதற்கு முன்னரே அதே ஆண்டில் குஷ்பு ‘ரனதீரா’ என்ற கன்னட படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’ரனதீரா’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியதால் அதன் பின்னர் ரவிச்சந்திரனின் ஒரு சில படங்களில் குஷ்பு நாயகியாக நடித்து இருந்தார் என்பதும், தமிழில் கூட ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற திரைப்படத்திலும் ரவிச்சந்திரன்-குஷ்பூ ஜோடியாக நடித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னட நடிகர் ரவிச்சந்திரன் குறித்த நினைவுகளை சமீபத்தில் குஷ்பு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். ரவிச்சந்திரனுடன் நான் நடித்த முதல் கன்னடப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக ஆனதால் நான் கன்னட சினிமாவின் ஒரு பகுதியாக இருந்தேன். நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் இன்னும் நான் தொடர்பில் இருக்கிறேன். எங்களை ரசிகர்கள் சிறப்பான ஜோடியாக மனதில் வைத்து இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நான் ஏமாற்ற மாட்டேன். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ரவிச்சந்திரனுடன் மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

More News

முடிவு செய்யுங்கள், முடிவு சொல்லுங்கள்: மதுரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் போஸ்டர்கள்!

சினிமா நடிகர்களை அரசியலுக்கு வர சொல்லும் போஸ்டர் கலாச்சாரம் மதுரையில் இருந்து தான் தொடங்கும் என்பது தெரிந்ததே

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அடுத்தகட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது என்றாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது

இணையத்தில் வைரலாகும் 'சுல்தான்' நடிகையின் ஒர்க்-அவுட் வீடியோ!

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்துவரும் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து

பிக்பாஸ் வீட்டில் சுசித்ரா; அர்ச்சனாவுக்கு குருப்புக்கு ஆப்பு?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து இன்று 28வது நாள் நடைபெற்று வரும் நிலையில் இன்று பாடகர் வேல்முருகன் வெளியேறுகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

எவிக்சன் குறித்து ஆஜித்திடம் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நேற்று காப்பாற்றப்பட்ட நிலையில்