close
Choose your channels

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் இமயம்!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட அடுத்தகட்ட ஊரடங்கு இன்று முதல் தொடங்குகிறது என்றாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக நவம்பர் 10ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு 100 பேர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 150 பேர்கள் வரை அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் திரையுலகினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திரையரங்குகளை திறக்கவும், படப்பிடிப்பை அதிக எண்ணிக்கையிலான நபர்களுடன் நடத்தவும் அனுமதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களுக்கும், அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.