close
Choose your channels

எவிக்சன் குறித்து ஆஜித்திடம் கேள்வி கேட்ட கமல்ஹாசன்!

Sunday, November 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நேற்று காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள 6 பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் ’ஆருடம் கூறும் ஆஜித் அவர்களே, இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என்று கூறுங்கள் என்று கமல் கேட்க அதற்கு ஆஜித் அமைதியாக உள்ளார்.

அதன் பின்னர் இதே கேள்வியை வேல்முருகனிடம் கமல் கேட்கும்போது ’நான் தான் வெளியே போக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை அடுத்து ’நீங்கள் இப்போது ஜோசியர் ஆகி விட்டீர்களா? என்று நகைச்சுவையுடன் கமென்ட் அடித்தார் கமலஹாசன்.

இந்த நிலையில் இன்றைய புரமோவின் கடைசி ஷாட்டில் வேல்முருகனை அனைவரும் வழி அனுப்புவது போன்ற ஒரு காட்சி இருப்பதால் வேல்முருகன் தான் இன்று வெளியேறினார் என்பது உறுதியாகியுள்ளது. வேல்முருகனின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.