மோடிக்கு சவால் விடும் லேடி...! சபாஷ் சரியான போட்டி....!

  • IndiaGlitz, [Wednesday,April 14 2021]

மாத்துவா சமூகத்திற்கு நான் எதையும் செய்யவில்லை என மோடி கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு நான் விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கூறியிருக்கிறார்.

சமீபத்தில் மதம் குறித்து தேர்தல் பிரச்சாரங்கள் செய்ததால், மம்தா-வை 24 மணிநேரத்திற்கு பரப்புரை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் பராசாத் பகுதியில் தனியொருவராக போராட்டத்தில் ஈடுபட்டார். கலைகளில் ஈடுபாடுள்ள மம்தா வண்ண ஓவியங்களை வரைந்து அமைதியான முறையில் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

8 கட்டங்களாக மேற்குவங்க தேர்தல் நடைபெற்றுவருகிறது. தேர்தல் பரப்புரைக்காக பேசிய பிரதமர் மோடி அவர்கள் மம்தா மாத்துவா சமூகம் போன்ற சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் மத்திய அரசு நிறைய செய்துள்ளது, தான் செய்ததை நிரூபிக்க மம்தா தயாரா என மோடி சவால் விட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மம்தா கூறியதாவது,

மோடி கூறியதை நான் ஏற்கிறேன், அப்படி நான் சிறுபான்மையினருக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்றால், அரசியலை விட்டு விலகத்தயாராக உள்ளேன். ஆனால் மோடி கூறுவது தவறு என்றால், அவர் காதுகளை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இத்தனை வருடங்களில் இல்லாமல், இம்முறை மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு செய்யும் இடங்களிலும் மோடி அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்.இதை ஏன் தேர்தல் ஆணையம் தடுப்பதில்லை..? மோடி பொய் கூறி, மக்களை தவறான பாதையில் நடத்திச் செல்கின்றார். நான் தேர்தலன்று அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்ய தயார் என்றும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.


 

More News

ஆம்பூர் காவலர்கள் உற்சாகமாக வேலை செய்ய புதிய முயற்சி...!

கோடை வெயிலை தாக்குபிடிக்க முடியாத காரணத்தால், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ச்சி உணவுப்பொருட்களை வழங்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படுகிறதா...! டெல்லி முதல்வர் கடிதம்....!

கொரோனா தீவிரமாகி வருவதால், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

'குக் வித் கோமாளி' கிராண்ட் ஃபினாலே: ஷிவாங்கி பதிவு செய்த உருக்கமான டுவீட்

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு 5 மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'அந்நியன்' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்: காற்றில் பறக்கவிடப்பட்ட கொரோனா விதிமுறைகள்!

இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் குளிப்பது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று