close
Choose your channels

'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்!

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’அந்நியன்’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.200 கோடிக்கு மேல் இருந்தாலும் இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் அப்போதே வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி இருந்தார்

இந்த நிலையில் இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழில் விக்ரம் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும் இந்த படம் ஹிந்தியில் உருவாக்குவது குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த நேரத்தில், என்னை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்றும், இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய சினிமா அனுபவத்தை மீண்டும் கொண்டு வருவார்கள் என்றும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.