'லியோ' தெலுங்கு பதிப்பிற்கு தடை.. திடீரென ஏற்பட்ட திருப்பம்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’லியோ’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
D ஸ்டுடியோ என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ’லியோ’ திரைப்படத்தை அக்டோபர் 20ஆம் தேதி வரை வெளியிட தடை என உயர் நீதிமன்றம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ’லியோ’ திரைப்படம் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வெளியாகாது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
D ஸ்டுடியோ நிறுவனம் ’லியோ’ திரைப்படம் வெளியாக என்ஓசி வழங்கி உள்ளதாகவும் இன்று தங்களுடைய வழக்கை அந்நிறுவனம் வாபஸ் பெறுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ’லியோ’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது என்பதும் இந்த தகவல் நீதிமன்றத்துக்கு சென்ற பிறகு ’லியோ’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments