லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்

தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து முடித்துள்ள ’மாஸ்டர்’ படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியையும் முடித்து விட்டதாகவும், தற்போது ’மாஸ்டர்’ படம் ரிலீசுக்கு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் ’மாஸ்டர்’ திரைப்படம் சரியான தேதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தின் திரைக்கதையை எழுத தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த திரைக்கதை கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படமா? அல்லது வேறு படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

கொரோனா; பிளாஸ்மா சிகிச்சையில் வெற்றிக் கண்ட இந்திய மருத்துவர்கள்!!! அடுத்து என்ன???

கொரோனா சிகிச்சையில் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் கொரோனா பாதித்த நபர்களின் பிளாஸ்மாவை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தன

விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்

கோலிவுட் திரையுலகின் இளம் ஹீரோக்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்குவதாக இருந்தார்

ஊரடங்கு உத்தரவு குறித்து பிரதமர் எடுத்த முடிவு என்ன? அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் உள்பட அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை செய்த பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது

கொரோனா பரிசோதனையில் தொடரும் குழப்பங்கள்!!! இந்தியாவின் நிலைமை என்ன!!!

கொரோனா நோய்த்தொற்று மற்ற பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் போன்று இருப்பதில்லை. இதற்காகச் செய்யப்படும் பரிசோதனை முதற்கொண்டு இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு வரை அனைத்தும் வித்தியாசப்படுகின்றன

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்க சென்ற நபர் கைது

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவரை சந்திக்கச் சென்ற நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.