close
Choose your channels

காதல் திருமணம் செய்த இளைஞரை தண்டவாளத்தில் தூக்கி போட்ட பெண்ணின் உறவினர்கள்

Tuesday, November 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்லை மாவட்டத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர் ஒருவரை பெண்ணின் உறவினர்கள் தூக்கி தண்டவாளத்தில் வீசி கொலை செய்ததாக பெண்ணின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் அதே பகுதியை சேர்ந்த வான்மதி என்ற பெண்ணை காதலித்து, இரு குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இரு குடும்பத்திற்கும் ஏற்கனவே நீண்டநாள் பகை என்பதால் இந்த திருமணம் காரணமாக பெண்ணின் உறவினர்கள் நம்பிராஜன் மீது கடும் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து இரு குடும்பத்தினரும் கோபம் தீரும் வரை நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் தங்க புதுமணத்தம்பதிகள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தனது நண்பர்கள் அழைப்பதாகக் கூறி நம்பிராஜன் வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. இதன்பின்னர்  தென்காசி அருகே ரயில் தண்டவாளத்தில் இரு துண்டுகளாக நம்பிராஜன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நம்பிராஜனின் துண்டான உடலை பார்த்து கதறி அழுத வான்மதி இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்துள்ளார். போலீசாரின் விசாரணையில் நம்பிராஜனை வான்மதியின் உறவினர்கள் தூக்கி சென்று ரயில் வரும்போது தண்டவாளத்தில் வீசி கொலை செய்ததாக தெரிய வந்தது.  இதனை அடுத்து வான்மதியின் உறவினர்கள் 3 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.