close
Choose your channels

ரஜினி, கமலை அடுத்து லைகாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்

Tuesday, January 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படத்தை சுமார் ரூ.450 கோடியில் தயாரித்துள்ள லைகா, நிறுவனம் இந்த படத்தை வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கமல், ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தையும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி, கமலை அடுத்து மணிரத்னம் அவர்களுடன் கைகோர்க்க லைகா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சிம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, பகத்பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்தசாமி என ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ள படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது லைகா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படமும் பிரமாண்ட படங்களில் ஒன்றாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்காது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.