close
Choose your channels

ஸ்காட்லாந்தில் நிலம் வாங்கிய தமிழ் சினிமா பிரபலம்… வாழ்த்தும் ரசிகர்கள்!

Saturday, February 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாநாடு திரைப்படத்தின் எடிட்டர் பிரவீன் கேல்.எல் சமீபத்தில் ஸ்காட்லாந்தில் ஒரு சதுரஅடி நிலம் வாங்கியுள்ளார். இதனால் பதிலுக்கு அந்நாட்டு அரசு சிறப்பு பரிசு ஒன்றைக் கொடுத்து அசத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் “சென்னை 26“ படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் பிரவீன் கே.எல். இவர் இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு“ திரைப்படத்தில் இவரின் பணி சிறப்பாகப் பேசப்பட்டது. டைம் லூப் முறையில் அமைந்திந்த இந்தப் படத்தால் பிரபலமான பிரவீன் தற்போது சிம்புவின் அடுத்த படமான “பத்துதல“ திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பிரவீன் கே.எல். ஸ்காட்லாந்தில் ஒரு சதுர நிலத்தை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் இதனால் அந்நாட்டு அரசு இவருக்கு “லார்ட்“ என்று பட்டப்பெயரைக் கொடுத்து அதை வாழ்நாள்முழுவதும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருப்பதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் வாங்கியுள்ள ஒரு சதுர அடி நிலத்தில் ஒரு மரம் வைத்து பராமரிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

பல வெற்றிப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருக்கும் பிரவீன் “ஆரண்யகாண்டம்“ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.