close
Choose your channels

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தை ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி நடிப்பில் வி.ஜே.கோபிநாத் என்பவரின் இயக்கத்தில் உருவான’ ஜீவி’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ‘மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கவிருக்கும் நிலையில் நடிகர் வெற்றி மீண்டும் இந்த படத்தின் நாயகனாக நடிக்க உள்ளார். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் பிரவீன்குமார் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த கிட்டத்தட்ட அனைவருமே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிய இருப்பதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.