close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்!

Tuesday, November 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ‘மாவீரன்’ படத்தின் ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயன் தலையிடுவதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் மடோன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது, ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக எப்படி வதந்தி பரவியது என்று எனக்கு தெரியவில்லை. கனமழை காரணமாக வெளிப்புற படப்பிடிப்பு மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது மழை குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளோம். தற்போது கூட நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறோம்.

‘மாவீரன்’ திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் துளியும் உண்மையில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கும் இந்த படத்தின் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.