மதம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலடி கொடுத்த மாதவன்

  • IndiaGlitz, [Friday,August 16 2019]

வேலை வெட்டி இல்லாத சில நெட்டிசன்கள் பிரபலங்களை வம்புக்கு இழுப்பதையே ஒரு முழு நேர தொழிலாக வைத்திருப்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகர் மாதவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படத்தை சுட்டுக்காட்டி மதம் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்றை நெட்டிசன் ஒருவர் எழுப்பியுள்ளார்., அந்த கேள்விக்கு மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் மாதவனின் புகைப்படத்தில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு நடுவே சிலுவையும் இருந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன், 'இந்த புகைப்படத்தில் இந்து கடவுள்களின் அருகில் சிலுவை உள்ளதே? அது ஏன்? கிறிஸ்துவ தேவாலயங்களில் இந்து கடவுள்களின் படங்கள் உள்ளதா? நீங்கள் நடத்துவது எல்லாம் ஒரு போலி நாடகம் என பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த மாதவன், 'உங்களை போன்றவர்களின் கருத்துகளுக்கு பதில் தரவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் நீங்கள் முதலில் சரியான மனநிலையில் இல்லை. அந்தப் படத்தில் சிலுவைக்கு பக்கத்தில் பொற்கோயில் சிலை உள்ளது. நீங்கள் அதை பார்க்கவில்லையா? அவ்வாறு பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டதாக கேள்வியை எழுப்பியிருப்பீர்கள்

புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் பொருட்களில் பாதி நான் வாங்கியவை மீதி எனக்கு பரிசாக வந்தவை. எனக்கு சிறுவயதிலிருந்து எம்மதமும் சம்மதம் என்று கற்று கொடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய மகனையும் அதுபோலவே வளர்த்து வருகிறேன். எனவே நான் என்னுடைய மதத்தை எப்படி மதிக்கின்றோனோ அதேபோல் அனைத்து மதங்களையும் மதிப்பேன். நான் தர்கா, குருதுவரா மற்றும் சர்ச் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்துள்ளேன். அந்த இடங்களில் எல்லாம் எனக்கு நிறையவே அன்பு கிடைத்துள்ளது. எனவே இந்த உலகத்தில் முக்கியமானது அன்பு தான். அந்த அன்பையும் அமைதியையும் நான் உங்களுக்கும் தருகிறேன்' என்று பதிலடி கொடுத்துள்ளார். மாதவனின் இந்த பதிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

மூன்று தேசிய விருதுகள் பெற்ற படத்தின் ரீமேக்கில் பிரசாந்த்!

ஒருகாலத்தில் அஜித், விஜய்க்கு இணையான ஸ்டாராக இருந்த நடிகர் பிரசாந்த், கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது

கஸ்தூரியை பங்கமாய் கலாய்த்து வரும் கவின் கூட்டணி! 

பிக்பாஸ் வீட்டில் வைல் கார்ட் எண்ட்ரி ஆக வந்த கஸ்தூரி நிகழ்ச்சியை மேலும் பரபரப்பாகவும், சுவராசியமாகவும் மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது

இத்தனை நாள் வேற்றுகிரகத்திலா இருந்தீங்க! மதுமிதாவை வறுத்தெடுத்த லாஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் வனிதா வந்த பின்னர் ஒருபக்கம் சண்டை சச்சரவு வந்தாலும், இதுநாள் அமைதியாக இருந்த அபிராமி, லாஸ்லியா ஆகிய இருவரையும் பொங்கி எழ வைக்கும் ஒரு நல்ல விஷயமும் நடந்துள்ளது

'பிகில்' பெயரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில்

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை! அதிர்ச்சி தகவல்

கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்றிரவு