close
Choose your channels

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Tuesday, June 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்பதால் சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது

மேலும் சாத்தான்குளம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணையை துவக்கும் வரை, நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உடல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது என்றும், அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் இந்த வழக்கில் விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.