தனுஷ் படத்தில் வாய்ப்பு கிடைக்க கொரோனா தான் காரணம்: மாளவிகா மோகனன்


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன் என்பது தெரிந்ததே. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த மாளவிகா மோகனன், சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கொரோனா தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் கொரோனா பாதிப்புக்கு முன்பே படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் தான் மூன்று படங்களில் கமிட் ஆகியிருந்ததால் கைவசம் அவர்கள் கேட்ட தேதி இல்லை என்றும் கூறினார்.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. இதனை அடுத்து மீண்டும் தனுஷ் படக்குழுவினர் மீண்டும் என்னிடம் அணுகிய போது தன்னிடம் தேதி இருந்ததாகவும், அதன்பின்னரே ஒப்பந்தமானேன் என்றும் கூறியுள்ளார். எனவே தனுஷ் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும் தனுஷுடன் தானும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments