மயக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்… பிரபல நடிகர் மீது வழக்கு!

  • IndiaGlitz, [Thursday,April 28 2022]

மலையாள திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பைத் தவிர நடிகர் விஜய் பாபு ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் “பெருச்சாழி“, “ஆடு“, “முத்துக்கவு“, “ஆடு2“, “ஹோம்“, போன்ற பல படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறி தன்னை கடந்த ஒன்றரை மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார் என்று கோழிக்கோடு பகுதியில் வசித்துவரும் இளம் நடிகை ஒருவர் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி எர்ணாகுளம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் எனக்கு சினிமா துறையில் யாரையும் தெரியாது. விஜய் பாபு மீது தனிப்பட்ட நம்பிக்கை இருந்தது. அவர் எனக்கு சினிமா வாய்ப்பு வாங்கித்தருவதாகக் கூறியிருந்தார். இதையடுத்து எனக்குப் பல முறை ஆலோசனைகளை வழங்கிய அவர் கொச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கடந்த மார்ச் 13 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பலமுறை எனக்கு மயக்க மருந்துகளைக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். உதவி செய்கிறேன் என்கிற பெயரில் மது மற்றும் போதைப்பொருளை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகர் விஜய் பாபு மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 376, 506, 323 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்வதற்காக போலீசார் அவரைத் தேடியபோது தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்மீதான பாலியல் புகார் குறித்து முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஜய் பாபு தான் குற்றமற்றவன் என்று கூறியதோடு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நடிகையின் பெயரையும் வெளிப்படுத்திவிட்டார். இது தவறான செயல் என்று எச்சரித்த போலீசார் அவரைத் தேடிவருகின்றனர்.

More News

காத்துவாக்குல சமந்தாவுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 நடிகை சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவரது பிறந்தநாள் இன்று ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இளம் நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபி சத்யராஜ் நடித்த நீண்டகாலமாக தாமதமான படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

நீச்சல் குளத்தில் இருந்து ஃபிளையிங் கிஸ்: வைரலாகும் வித்யூலேகா வீடியோ!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகை வித்யூலேகா நீச்சல் குளத்திலிருந்து ரசிகர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பள்ளி காலத்திலேயே பாடகர்: பிரபல இசையமைப்பாளர் பகிர்ந்த புகைப்படம்!

 தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், தான் பள்ளி காலத்திலேயே இசையில் ஆர்வம் கொண்டு பாடகராக இருந்ததாக குறிப்பிட்டு அதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' ரிலீஸ் நாளில் விக்னேஷ் - நயன் எங்கே சென்றார்கள் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.