close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்' ரிலீஸ் நாளில் விக்னேஷ் - நயன் எங்கே சென்றார்கள் தெரியுமா?

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் முதல் காட்சி முடிவடைந்த நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்திற்கு குவிந்து வருவதை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ரிலீஸ் நாளில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் திருப்பதி சென்றுள்ளது தெரிய வருகிறது. இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருப்பதியிலிருந்து நயன்தாராவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் ’இன்று முதல் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உங்களுக்காக’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டுமென திருப்பதிக்கு சென்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா பிரார்த்தனை செய்துள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.