இரண்டே மாதத்தில் விடிய போகும் 'செக்க சிவந்த வானம்'

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது குறித்து பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் படமாக்கப்படும் என்பதே கடந்த கால வரலாறு. ஆனால் இந்த படம் மிகச்சரியாக திட்டமிட்டு மொத்த படப்பிடிப்பையும் 55 நாட்களில் முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது இரண்டு மாதங்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா, துபாய் உள்பட பல முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில், வைரமுத்து பாடல் வரிகளில் உருவாகவுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More News

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

புதியதாக அறிமுகமாகும் டிவிக்கு மாப்பிள்ளையாகிறார் ஆர்யா

இந்தியின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் டிவி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த டிவி வரும் 19ஆம் தேதி முதல் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.