close
Choose your channels

ஒரு கோடி ரூபாய் ஆடி கார் வாங்கிய மணிரத்னம் பட நாயகி!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் படங்களில் நடித்த நடிகை ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர ஆடி கார் ஒன்றை வாங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான 'காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிராவ் ஹைத்ரி. இதனை அடுத்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ’ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள ஆடம்பர ஆடி காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து மும்பை ஆடி கார் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆடி கார் குடும்பத்தில் அதிதி ராவ் ஹைத்ரியை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றும் அவருக்கு எங்களது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் நடிகை அதிதிராவ் ஹைத்ரி தற்போது ‘ஜுப்லி’ என்ற வெப்தொடரில் நடித்துள்ளார் என்பதும் இந்த தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.