ஜீவா-அருள்நிதி இணையும் புதிய படத்தில் பிரபல நாயகி

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

கோலிவுட் திரையுலகில் இரண்டு ஹீரோக்கள் படங்கள் அரிதாகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் நாயகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகை நாயகியாக நடிக்கவுள்ளார்.

தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஒரு நாயகியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளதாகவும், இன்னொரு நாயகி குறித்த பரிசீலைனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறும்படங்கள் மூலம் பிரபலமான ராஜேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜீவா தற்போது கொரில்லா, ஜிப்ஸி, கீ ஆகிய படங்களிலும் அருள்நிதி தற்போது 'புகழேந்தி என்னும் நான்' என்ற படத்திலும் நடித்து வருகின்றனர். அதேபோல் கவுதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகன் தற்போது 'தேவராட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.

 

More News

நல்ல சோறு போட்டவர்களுக்கு புழுத்து போன அரிசியா? கமல் காட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட நடிகர், அரசியல்வாதி கமல் நேற்று இரண்டாம் முறையாக டெல்டா பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

'நீங்க அடுத்த சி.எம்-க்கு வண்டி ஓட்றீங்க: கமல் சென்ற பேருந்தில் கலகல...

மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாவது முறையாக டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்

அஜித்தை பார்க்க குவிந்த ரசிகர்கள்: போலீசார் தடியடியால் பரபரப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் 'தக்சா' என்ற அமைப்பு ஆளில்லா விமானம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது என்பதும் இந்த அமைப்புக்கு தல அஜித் ஆலோசகராகவும் உள்ளார்

'இந்தியன் 2' நாயகியாகும் அஜித்-விஜய் பட நடிகை

ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான '2.0' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 முதல் தொடங்கவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

'என்.ஜி.கே' குறித்த புதிய அப்டேட்: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படத்தின் புதிய அப்டேட் கேட்டு சூர்யாவின் ரசிகர்கள் படக்குழுவினர்களுக்கு பல மாதங்களாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.